இலங்கை சிறையிலிருந்து தமிழக மீனவர்கள் விடுவிப்பு!

tamilka

எல்லை மீறி மீன்பிடித்ததாக கூறி ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மத்திய அமைச்சர் சுஷ்மாவின் இலங்கை பயணத்தையொட்டி நல்லெண்ண அடிப்படையில் 76 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் அவர்கள் இந்திய தூதரகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த 76 பேர் தவிர்த்து கடலில் தத்தளித்த 4 பேரையும் இல்ங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு இந்தியா அனுப்பப்படுகின்றனர். 80 மீனவர்களையும் சர்வதேச எல்லைப் பகுதியில் கடலோரக் காவல்படையினரிடம் இலங்கை வீரர்கள் ஒப்படைபார்கள்.

அங்கிருந்து கடலோர காவல்படைக்கு சொந்தமான படகு மூலம் அவர்கள் இன்று மாலைக்குள் காரைக்கால் அழைத்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response