எடப்பாடி தலைமையில் நாளை எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

minis

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரி ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே மாவட்ட வாரியாக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசிவருகிறார்.

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் 12ஆம் தேதி நடைபெறவுள்ளதால் அதற்கு முன்னதாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னையில் நாளை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்க தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Response