கோவில்ப்பட்டி தனியார் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இருவர் பலி !

விருதுநகர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. இதில் வெயில் காலம் என்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுவது அனைவரும் அறிந்ததே.  அதேபோல் இன்று காலையில் சங்கரலிங்கபுரத்தை அடுத்த ஓ. கோவில்பட்டியில் தனியார் ஆலைக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு அறையே தரைமட்டமானது.

அந்த அறையில் மருந்து கலக்கி கொண்டிருந்த தொழிலாளர்கள் முருகன், சந்திரன் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிவகாசி அருகே உள்ள முதலிபட்டியில் நடந்த வெடி விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response