மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

ChennaiMeteorological

செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன்:-

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றார். தாழ்வு மண்டலமாக மாறி டிசம்பர் 7-ம் தேதி வாக்கில் தெற்கு ஆந்திரா, வட தமிழகம் நோக்கி வரக்கூடும் என்று கூறினார்.

மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப்பகுதிக்கு நகரக்கூடும் என்றும், டிசம்பர் 5ம் தேதி வரை மீனவர்கள் தெற்கு ஆந்திரா மற்றும் ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளர்.

 

Leave a Response