இலங்கை சிறையிலிருந்து தமிழக மீனவர்கள் 77 பேர் இன்று விடுதலை!

bout
எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 90க்கும் மேற்பட்டோர் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 77 பேரை நல்லெண்ண அடிப்படையில் விடுவிப்பதாக கடந்த 28 -ம் தேதி இலங்கை அரசு அறிவித்தது. இந்நிலையில் இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழகத்தின் ராமேஸ்வரம், புதுக்கோட்டை மற்றும் நாகை மீனவர்கள் 77 பேர் இன்று தாயகம் திரும்புகின்றனர்.

விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையால், சர்வதேச எல்லையில் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் தற்போது காரைக்கால் துறைமுகம் வந்தடைந்தனர்.

Leave a Response