சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்டு கைதான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் விடுவிப்பு

சென்னை : சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்டு கைதான திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை காவல்துறையினர் விடுவித்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுனர்.

சென்னை அண்ணாசாலையில் சாலை மறியலில் ஈடுப்பட்ட ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். காமராஜர் சாலையில் மறியலில் ஈடுபட்டு கைதான, திமுக செயல்தலைவர் ஸ்டாலின்,கி.வீரமணி, திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்டோர் புரசைவாக்கத்தில் உள்ள மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

Leave a Response