தொடரும் கந்துவட்டி- பாலியல் தொல்லை குடுத்ததால் தற்கொலை!

paliyal

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த நெடுமானூர் கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன், சர்குணம் தம்பதியருக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தேவேந்திரன் வெளிநாட்டில் வேலை செய்து அனுப்பிய பணத்தில் அவரது குடும்பத்தினர் சொந்த வீடு கட்டி வந்தனர். இந்நிலையில் கூடுதல் செலவுக்காக அதே கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரிடம் சர்குணம் 50,000 ரூபாய் கடனாக பெற்றுள்ளார். அதற்கு 10 ரூபாய் வட்டி போட்டு ஒரு வருடத்தில் 3 லட்சம் ரூபாய்க்கு மேல் ராஜேந்திரன் வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

visham

இருப்பினும் மேலும் பணம் கேட்டு வெளிநாட்டில் இருந்து தேவேந்திரன் அனுப்பிய டி.வி. உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் ராஜேந்திரன் எடுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. கடன் பணத்தை கேட்டு ராஜேந்திரன் தன்னை கடுமையாக தாக்கியதாகவும், 10ஆம் வகுப்பு படிக்கும் தனது மகளை ராஜேந்திரன் பாலியல் ரீதியாக கொச்சைப்படுத்தி பேசியதால் மனம் உடைந்து அவர் விஷம் குடித்ததாகவும் சர்குணம் கூறியுள்ளார். விஷம் அருந்திய சர்குணத்தின் மகள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து காவல்துறையிடம் அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்குணம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Response