இலங்கை கடற்படை அட்டகாசம்- ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு!

fish1

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். 10க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை, அவர்களின் வலைகளையும், கிழித்து எறிந்து அட்டகாசம் செய்துள்ளனர்.

fig
இலங்கை கடற்படை தாக்குதலால், ராமேஸ்வரம் மீனவர்கள், மீன்பிடிக்க முடியாமல், சொந்த ஊர்களுக்கே திரும்பியுள்ளனர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response