ஆனி திருமஞ்சன திருவிழா !

aani
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன திருவிழா நேற்று நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆனந்த நடனமாடும் நடராஜருக்கு மார்கழி திருவாதிரை, மாசி வளர்பிறை சதுர்த்தி, சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி வளர்பிறை சதுர்த்தி, புரட்டாசி வளர்பிறை சதுர்த்தி ஆகிய நட்சத்திரங்களில் அபிஷேகம் செய்வது மிகவும் விசேஷமானது. நேற்று, ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் திருமஞ்சனம் பூஜை நடந்தது.

இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில், சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நேற்று காலை, சிவகாமசுந்தரி சமேத நடராஜர் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம், 16 வகையான தீபாராதனைகள் நடந்தன. பின்னர், திருமஞ்சன கோபுரம் வழியாக சுவாமி புறப்பட்டு மாட வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.

Leave a Response