ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடாவின் ரகசிய குறியீடு இதுதான்….

panam pattuvaada
தற்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில், பணப்பட்டுவாடா திறம்பட நடைபெற்று வருகிறது.இதை தேர்தல் ஆணையம் எவ்வளவு தான் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தாலும், பணம் கைமாறிக் கொண்டு தான் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் வக்காளர்களுக்கு புது விதமாக ரகசிய குறியீடு முலம் பணபட்டுவாடா நடக்கிறது.இதில் தற்போது வாக்காளர்களிடையே உலா வரும் அந்த ரகசிய வார்த்தை குறியீடு என்ன தெரியுமா? ’சாமி கும்பிட்டாச்சா?’ இது தான் அந்த வார்த்தை. அதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால் பணம் வாங்கியாச்சா என்பது தான். தற்போது வாக்காளர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச தொகை ரூ.4000 ஆகும்.

மேலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக எழுந்த புகாரில், இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார். பணம் பட்டுவாடா நடைபெறும் போது, அப்பகுதி முழுவதும் ஒரு குழுவினர் உலா வருகின்றனர். அவர்கள் பறக்கும் படையினர் வந்துவிட்டால் உடனடியாக மற்றவர்களுக்கு தகவல் அளித்து, தப்பிக்க வழி செய்துவிடுகின்றனர். வரும் 12ஆம் தேதி தேர்தல் நடைபெற்று, 15ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

Leave a Response