இன்று 81-வது பிறந்தநாள் காணும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் , ‘ஜனாதிபதி பிரணாப் அவர்களின் அனுபவமும் ஞானமும் நாட்டுக்கு ஆதாயத்தை தேடித்தந்துள்ளது.
அவர் நீண்ட காலம், நலமுடன் வாழ பிரார்த்திக்கிறேன். பிரணாப் எப்போதும் மற்றவைகளை விட நாட்டு நலனையே பெரிதாக கருதுபவர். இது போன்றதொரு நன்கு படித்த, அறிவான ஜனாதிபதியை நாம் பெற்றிருப்பதில் பெருமை கொள்வோம் என குறிப்பிட்டுள்ளார்.