பழவேற்காடு; மனநோயாளி ; 10 பேர் கைது !!

பழவேற்காட்டில் மன நோயாளி கொல்லப்பட்ட வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பழவேற்காட்டில் கடந்த 9ஆம் தேதி குழந்தை கடத்த வந்ததாக கருதி மன நோயாளியை அடித்துக் கொன்று பாலத்தில் தொங்கவிட்டனர். இச்சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Response