பழவேற்காடு மீனவர்கள் நான்காவது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை !

pazhavaer
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையாலும் கடல் அலையின் சீற்றம் காரணமாகவும் லைட்ஹாவுஸ் குப்பம், அரங்ககுப்பம், கூனங்குப்பம் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட மீனவகிராமங்களை சேர்ந்தவர்களும் எண்ணூர், தாழங்குப்பம், சிவன்படைவீதி, சின்னகுப்பம் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்களும் நான்காவது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.

மேலும் கடற்கறை ஓர கிராமங்களில் கடல் சீற்றம் காரணமாக தொடர்ந்து மண் அரிப்பு ஏற்பட்டு கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளதாகவும், அதிகாரிகள் வந்து நேரில் பார்வையிட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் காமராஜர் துறைமுகம் அருகே கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளாகி கச்சா எண்ணைய் பாதிப்பிற்கு உள்ளான மீனவர்களுக்கு உடனடியாக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Response