பஹல்காம் துப்பாக்கிச் சூடு எதிரொலி : பாகிஸ்தானும் இந்தியாவுக்கு தடை விதிக்கப் போகிறது!

ஜம்மு காஷ்மீரின் அழகிய சுற்றுலாத்தலமான பஹலகாமின் சுற்றுலாப் பயணிகள் 26 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற விஷயம் நாட்டையே உலுக்கியது.

இந்த கொடூர தாக்குதால் நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த தாக்குதலில் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக குற்றம்சாட்டும் இந்தியா அந்நாட்டுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதாவது பாகிஸ்தானுடன் செய்து கொண்ட சிந்துநதிநீர் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் நிறுத்தி வைத்தது. மேலும் அட்டாரி வாகா எல்லையை மூடுவதாக அறிவித்தது. மேலும் பாகிஸ்தானியர்களுக்கான விசாவை ரத்து செய்வதாக அறிவித்தது. பாகிஸ்தானியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவிற்கு பதிலடியாக பாகிஸ்தானும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்தியாவுடன் அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மேலும் சார்க் விசா விலக்குத் திட்டத்தின் கீழ் சீக்கிய யாத்ரீகர்களைத் தவிர, இந்தியர்களுக்கு விசாக்களை பாகிஸ்தான் அரசு நிறுத்தி வைத்துள்ளது.

Leave a Response