கருணாநிதி சமாதியில் வேட்புமனுவை வைத்து மரியாதை செய்த ஸ்டாலின்..!

நாளை மறுநாள் திமுக பொதுக்குழு கூடுகிறது. மிகவும் பரபரப்பான சமயத்தில் கூடும் இதில் திமுக தலைவர் பதவிக்கும், பொருளாளர் பதவிக்கும் தேர்தல் நடக்க உள்ளது.

தலைவர் பதவிக்கு தற்போதைய செயல்தலைவர் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த நிலையில் திமுகவில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஸ்டாலின் தன்னுடைய வேட்புமனுவை திமுக தலைவர் கருணாநிதியின் சமாதியில் வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். இதனால் அங்கு சில நெகிழ்ச்சியான சூழ்நிலை நிலவியது.

அதேபோல் துரைமுருகனும் பொருளாளர் பதவிக்கு அளிக்க உள்ள வேட்புமனுவை கருணாநிதியின் சமாதியில் வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். முன்னதாக ஸ்டாலின் நேரடியாக சென்று க.அன்பழகன், துரைமுருகனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அதன்பின், கோபாலபுரம் இல்லத்தில் உள்ள கருணாநிதியின் புகைப்படத்தில் வைத்து மரியாதையை செலுத்தினார். பின் குடும்ப உறுப்பினர்களிடம் பேசிவிட்டு கருணாநிதியின் சமாதிக்கு சென்றுள்ளார்.

அதன்பின்பே ஸ்டாலின் தன்னுடைய வேட்புமனுவை திமுக தலைவர் கருணாநிதியின் சமாதியில் வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். இதை பார்த்து அங்கு இருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.

Leave a Response