மிஸ் இந்தியா விழாவில் மகுடம் சூடி பட்டம் வென்ற தமிழ்ப்பெண்..!

சென்னையைச் சேர்ந்த அனுகீர்த்தி வாஸ் என்ற 19 வயது பெண் மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அழகிக்கான தேர்வு நேற்று மாலை நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு கடைசியில் இறுதி சுற்றுக்கு 30 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள். இதில் தமிழகத்தை சேர்ந்த அனுகீர்த்தி வாஸ் என்ற பெண்ணும் கலந்து கொண்டு இருந்தார்.

இந்தியாவின் முன்னணி அழகு சாதன நிறுவனங்கள், பிரபலங்கள் இதில் தேர்வு குழுவில் ஈடுபட்டு இருந்தனர். இதன் இறுதிச்சுற்றில், சென்னையை சேர்ந்த அனுகீர்த்தி வாஸ் மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்டார்.

அவர் சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ. பிரெஞ்ச் படித்து வருகிறார். அவருக்கு 19 வயதே ஆகிறது. நடிப்பு, மாடலிங் என பல துறைகளில் இவர் திறமையுடன் இருப்பதால் அவருக்கு இந்த மகுடம் சுட்டப்பட்டுள்ளது.

இந்த வருட இறுதியில் உலக அழகி போட்டிக்கான தேர்வுகள் நடக்கும். அப்போதும், இந்தியா சார்பாக இவர் பரிந்துரை செய்யப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

Leave a Response