ஓகி புயல் பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார் மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர்!

nirmala.

குமரி மாவட்டத்தில் ஓகி புயல், மழை சேதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர்  நிர்மலா சீத்தாராமன் நேற்று மாலை கன்னியாகுமரிக்கு தனி ஹெலிகாப்டரில் வந்தார். அவரை துணை முதல்வர் பன்னீர்செல்வம், வருவாய்துறை அமைச்சர் உதயகுமார், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மின்வாரிய துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் சந்தித்து பாதிப்புகள் குறித்து தெரிவித்தனர்.  பின்னர் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அங்கிருந்து மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய காரில் புறப்பட்டார்.

nirmala1

சுசீந்திரம் வந்த அவர் அங்குள்ள கவிமணி நகர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசினார். அப்போது பெண்கள் கண்ணீருடன் அவரிடம் முறையிட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

Leave a Response