தஞ்சையில் தான் நெல்லும், சொல்லும் விளைகிறது : எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வரின் ரைமிங் பேச்சு

eps-2

தஞ்சாவூரில் பெருமைகளை எடுத்துக்கூறி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் பழனிச்சாமி பேசினார். ராஜராஜ சோழனின் பெருமைகளை எடுத்து கூறியும் உரையாற்றினார். தாய்மொழியின் பெருமைகளை வசனங்கள் மூலமாக எம்.ஜி.ஆர். வெளிப்படுத்தினார். எம்.ஜி.ஆரை இருகரம் கூப்பி வரவேற்று சீராட்டிய ஊர் தஞ்சையாகும். தமிழர்களின் கட்டடக் கலைக்கான சான்றுகள் தஞ்சையில் நிறைய உள்ளன.

எவ்வித பாதிப்பும் ஏற்படாத அளவுக்கு தஞ்சை பெரிய கோயில் நிமிர்ந்து நிற்கிறது. மற்ற நகரங்களை மிஞ்சும் நகரமாக தஞ்சை நகரம் திகழ்ந்து வருகிறது என முதல்வர் கூறியுள்ளார்.  தஞ்சையில் தான் நெல்லும், சொல்லும் விளைவதாக முதல்வர் எடப்பாடி புகழராம் சுட்டியுள்ளார்.

pht_12296

ஓ.பி.எஸ். பேச்சு

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் உருவான இன்னும் அதிமுக 100 ஆண்டுகள் நிலைத்திருக்கும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார். தமிழகத்தில் ஆட்சி செய்யும் அதிமுக ஒரு துரும்பும் அகலாதவாறு ஆர்.கே.நகரில் வெற்றிபெறும் என்று கூறியுள்ளார். அதிமுக ஒன்றிணைந்து இருக்க வேண்டும் என்பதுதான் தமிழக மக்கள் மற்றும் தொண்டர்களின் விருப்பம் என்று உரையாற்றியுள்ளார்.

 

Leave a Response