உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து செவிலியர்கள் போராட்டம் வாபஸ்!

 

0fe9599db1ae75ef722a9ce89ec58321

உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து டிஎம்எஸ்-ல் போராடிய செவிலியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

சென்னையில் செவிலியர்கள் 3 நாட்களாக நடத்திய போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். உயர்நீதிமன்ற போராட்டத்திற்கு தடை விதித்ததை அடுத்து செவிலியர்கள் முடிவு செய்துள்ளனர்.

செவிலியர்கள் உடனே பணிக்கு திரும்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் செவிலியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதோடு, பேச்சுவார்த்தை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின் விசாரணை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையடுத்து சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்களின் உள்ளிருப்பு போராட்டம் திரும்பப்பெறப்பட்டுள்ளது.

Leave a Response