நேரு ஸ்டேடியத்தில் அநாகரிகமாக நடந்து கொண்ட ரசிகர்கள் கைது!

chennai_vs_adk

நாடு முழுவதும் உள்ள நகரங்களில் ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடந்த போட்டி ஒன்றில் சென்னையின் எஃப்சி, நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணிகள் மோதின. இந்தப் போட்டியின் போது, சென்னையைச் சேர்ந்த இரு ரசிகர்கள், போட்டியைக் காண வந்த வடகிழக்கு மாநில பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டனர். இது கேமராவில் படம் பிடிக்கப்பட்டு தொலைக்காட்சிகளில் வெளியானது.
man-harasses-northeastern-girls-at-isl-game-in-chennai2

இதையடுத்து, சென்னையின் எஃப்சி அணி நிர்வாகம் தரப்பில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட இருவரையும் போலீஸார் கைது செய்தனர். போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்கள்: பெரம்பூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், அயனாவரத்தைச் சேர்ந்த கார்த்திக் குமார். விசாரணையில் கார்த்திக் குமார் கல்லூரி மாணவர் எனத் தெரியவந்தது. இருவர் மீதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இருவரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Response