மூன்று மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

rani

சென்னையில் நேற்றிரவு முதல் மழை பெய்துவருகிறது. இன்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

school

வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்துவருகிறது. கடந்த முறை தொடர்ந்து 9 நாட்கள் மழை பெய்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதால், வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Response