இராமநாதபுரத்தில் கஞ்சா விற்ற ஆறு பேர் அதிரடி கைது !

arrest
இராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்ச விற்ற 6 பேரை கைது செய்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஷ்வரம், மண்டபம் பகுதியில் அதிகளவில் கஞ்சா விற்கப்படுகிறது என்று மண்டபம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின்படி, மண்டபம் காவல்துறை உதவி ஆய்வாளர் மாயராஜலட்சுமி தலைமையில் கண்காணிப்பு மற்றும் சுற்றுப் பணியில் காவலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது நேரு நகர் சிறுவர் பூங்காவில் கஞ்சா விற்கப்பட்டுவகிறது என்று இரகசிய தகவல் கிடைத்ததையடுத்து காவலாளர்கள் அங்கு விரைந்துச் சென்றனர். காவலாளர்களைக் கண்டதும் தப்பி ஓட முயன்ற ஆறு பேரை காவலாளர்கள் துரத்திப் பிடித்தனர்.

இதனையடுத்து அவர்களை சோதனையிட்டபோது இரண்டரை கிலோ கஞ்சா பொட்டலம் இருந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து மண்டபத்தைச் சேர்ந்த ஜெகதீஷன் (46), முகேஷ் (24), ராமகிருஷ்ணன் (33), பொன்னாண்டி (58), பாலசுப்பிரமணி (34), இளவரசன் (25) ஆகிய ஆறு பேரை காவலாளர்கள் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

Leave a Response