ஆந்திராவில் படகு கவிழ்ந்து 17 பேர் பலி !

padagu
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தின் விஜயாவாடா அருகிலுள்ள பவானி தீவில் இருந்து பவித்ர சங்கமம் என்ற இடத்துக்கு படகு மூலம் சிலர் சுற்றுலா சென்றனர். அந்த படகில் சுமார் 38க்கு மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

இப்ராகிம் பட்டணம் என்ற இடத்தின் அருகே கிருஷ்ணா நதியில் செல்லும்போது திடீரென அந்த படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 17ஆக உயர்ந்துள்ளது. 17 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

Leave a Response