பிரபல நாளிதழ் பவள விழா; பிரதமர் மோடி இன்று சென்னை வருகை!

pm-modi1
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் (திங்கள்கிழமை) இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ள தினத்தந்தி நாளிதழ் பவள விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து சென்னை கடற்கரை சாலையில் உள்ள ஐ.என்.எஸ். அடையாறு விமானப் படையின் தளத்துக்கு ஹெலிகாப்டரில் வருகிறார். அந்த இடத்திலிருந்து அவர் கார் மூலம் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்துக்கு வருகிறார்.

தினத்தந்தி பவள விழா நிகழ்ச்சியில் நேரம் பங்கேற்று விட்டு, சென்னை சாந்தோமில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். டில்லியில் பிரதமர் அலுவலக இணைச் செயலாளர் டி.வி.சோமநாதனின் இல்லத் திருமண விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று விட்டு, ஐ.என்.எஸ். அடையாறு விமானப் படைத் தளத்துக்கு வந்து ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையம் சென்று டில்லிக்கு இன்று மாலையே திரும்புகிறார்.

பிரதமர் மோடியின் சென்னை வருகையை முன்னிட்டு கூடுதல் காவல் ஆணையர்கள் எம்.சி.சாரங்கன், ஜே.ராம், கே.பெரியய்யா ஆகியோர் தலைமையில் மாநகர் முழுவதும் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலையம் தொடங்கி விழா நடைபெறும் சேப்பாக்கம் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கம் வரை பிரதமர் வரும் சாலைகள் முழுவதையும் கண்காணிக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
modi 2
பிரதமர் மோடி பயணம் செய்யும் சென்னை மெரீனா கடற்கரை சாலையில் பாதுகாப்பு ஒத்திகை நேற்று நடைபெற்றது. சென்னை விமான நிலையம் முதல் பிரதமர் வந்து செல்லும் பாதை முழுவதும் போலீஸார் தீவிர சோதனைகளில் ஈடுபட்டனர்.

Leave a Response