சென்னை உள்பட ஆறு மாவட்டங்களில் கன மழை!

Chennai-rains_380

 வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனையடுத்து தமிழகம் புதுச்சேரி பகுதிகளில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மற்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மயைம் தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து, சென்னையில் இன்று பல்வேறு பகுதிகளில் தற்போது  கன மழை பெய்துவருகிறது.
மேலும் நாகை, திருவள்ளூர்,திருவாரூர், மாவட்டங்களில் மழை காலை முதல்மழை பெய்துவருகிறது.
சென்னை மாவட்டம் சென்னையின் கோட்டூர்புரம் ,கொளத்தூர், சைதாப்பேட்டை, நந்தனம், சவுகார் பேட்டை, மயிலாப்பூர்,கிண்டி, ஈக்காட்டுதாங்கள் அசோக்நகர் , போரூர், நுங்கம்பாக்கம், எண்ணூர் , ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, பிராட்வே, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிளிலும் மழை பெய்துவருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி , ஆண்டார்குப்பம் , தச்சூர், மீஞ்சூர், பழவேற்காடுஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்துவருகிறது. நாகைமாவட்டம் நாகை மாவட்டத்தில் தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்துவருகிறது.
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, கட்டிமேடு , மாங்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்துவருகிறது.திருச்சி , மணச்சநல்லூர், லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டம் போடியில் மழை பெய்து வருகிறது.

Leave a Response