கீ.வீரமணியின் அறிவுரையில் தமிழிசைக்கு வாழைப்பழத்தில் ஏற்றிய ஊசியா?

DK-President-K-Veeramani
தமிழகத்தில் பி.ஜே.பி. தலைவராக இருக்கக்கூடிய டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள், தான் இருக்கும் கட்சிக்கு ஏற்றார் போல் மதவாத அரசியல் கண்ணோட்டத்தில் அவ்வப்போது கருத்துகளை சொல்லி வருகிறார்.
TAMILISAISOUNDARARAJAN3
இவர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், மேல்ஜாதி ஆதிக்க மதவாத கட்சியில் தம்மை உட்படுத்திக் கொண்டதால், இடத்துக்கு ஏற்றார் போல் அவர் தெரிவித்துவரும் கருத்துகள் அனைத்தும் தமிழ்நாட்டில் எதிர்விளைவைத்தான் ஏற்படுத்தும் என்றாலும், அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் – பெண்ணொருவர் ஒரு கட்சியின் பொறுப்பாளராக இருக்கும் நிலையில், ஆபாசமாகவும், கொச்சைத்தனமாகவும் பதிவு செய்வது உகந்ததல்ல என்றும்
PERIYAR
பெண்ணுரிமைக்காகப் பாடுபட்ட தலைவர் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் பெண்களை இழிவுபடுத்துவது ஏற்கத்தக்கதல்ல என்றும் இனி பொதுவாழ்விற்குப் பெண்கள் வந்தால் இந்நிலைதான் என்ற நிலை உருவாகிவிடக் கூடாது என்றால் தமிழக பி.ஜே.பி. தலைவர் டாக்டர் தமிழிசை அவர்கள், எதையும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற முறையில் அவசரத்தில் வார்த்தைகளை நிதானமின்றிப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Response