ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷனின் தலைவர் யார்?

jayalalithaa1

உடல் நலம் பாதிப்பால் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஆண்டு செப்., 22ம் தேதி சேர்க்கப்பட்டார். டிச., 5ம் தேதி உயிரிழந்தார்.

jayalalithaa

அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கூறினர். அ.தி.மு.க.,வின் இரு அணிகளும் இணைந்த போது, ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது, விசாரணை கமிஷனின் தலைவராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமியை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Response