தமிழக ஆளும் அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், தினகரன் தலைமையில் ஒரு அணியுமாக செயல்பட்டு வருகின்றன. முதல்வர் மீது நம்பிக்கை இழந்து விட்டோம். முதல்வரை மாற்ற வேண்டும் என தினகரன் தரப்பினர் கவர்னரிடம் கடிதம் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் திமுகவினர் இன்று கவர்னரை சந்தித்து சட்டசபையை கூட்ட வேண்டும் என கடிதம் வழங்கியுள்ளனர். முதல்வர் பெரும்பான்மை இழந்து விட்டார் என்றும் எடுத்து கூறியுள்ளனர்.
இந்நிலையில் சுப்பிரமணிய சாமி அவரது டுவிட்டரில்;
தமிழகத்தில் திருப்புமுனையாக ஸ்டாலின், தினகரன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பார்கள் . இது விரைவில் சில நாட்களில் நடக்கும். என்றும் கூறியுள்ளார்.