சாமியார்கள் மீது புகழ் பெற்ற இந்தி நடிகர் காட்டம்!

risi

ராம்ரஹீமின் குற்றம் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளது. கலவரத்தில் இதுவரை சுமார் 36 பேர் மரணமடைந்தனர். இது குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதில் புகழ் பெற்ற இந்தி நடிகர் ரிஷி கபூரும் ஒருவர்.

gurmeet

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

“ராம் ரஹிம், நித்தியானந்தா, ஆஸாராம் பாபு, ராதேமா போன்ற அனைத்து சாமியார்களும் கிரிமினல்கள். இவர்கள் அனைவருமே சிறையில் அடைக்கப்பட வேண்டியவர்கள். தற்போது இதில் ஒரு கிரிமினலான ராம்ரஹிம் கைது செய்யப்பட்டதற்காக பல பொதுச் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டுள்ளன. அந்த இழப்பை ஈடு கட்ட அவருடைய ஆசிரம சொத்துக்கள் விற்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.” என கூறி உள்ளார்.

Leave a Response