கட்சியில் இருந்து ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா நீக்கம்! தினகரன் அதிரடி

uthaya

கட்சி பொறுப்பிலிருந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை வடக்கு எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளதாக தினகரன் அறிவித்துள்ளார்.

புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் பொறுப்பில் இருந்து ஆர்.பி.உதயகுமார் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் எம்.எல்.ஏ., மாரியப்பன் கென்னடி நியமிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., எம்.ரெங்கசாமி, கட்சியின் அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.விருதுநகர் மாவட்ட பொருளாளர் பதவியில் இருந்து எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பொறுப்பில் இருந்து என்.அழகர்சாமி நீக்கப்படுகின்றனர். அவர்களுக்கு பதில் விருதுநகர் மாவட்ட பொருளாளராக டி.முத்தையா, விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட செயலாளராக சி.சுப்ரமணியன், மாவட்ட இணைச் செயலாளராக என்.அழகர்சாமி, புரட்சி தலைவி அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளராக கே.விவேகானந்தன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.

ttv thinakarn

விருதுநகர் மாவட்ட மகளிர் அணி மாவட்ட செயலாளராக கவிதா தனசேகரன், மாவட்ட இணை செயலாளராக எம்.சொர்ணம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் மா.சேகர் நியமிக்கப்படுகிறார்.

மதுரை மாவட்ட புறநகர் செயலாளர் பதவியில் இருந்து ராஜன் செல்லப்பா நீக்கப்படுகிறார். அவருக்கு பதில் இ.மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Response