திமுக.வுக்கு துணிச்சல் இருக்கா? சுப்பிரமணியன் சுவாமி கேள்வி

swami1
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தலைமையின் கீழ் உள்ளதுதான் உண்மையான அதிமுக என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”அதிமுகவின் சின்னத்துக்கு உரிமை கோரும் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தவறான தீர்ப்பை அளித்துள்ளது. அதுதான் இன்றைய குழப்பத்துக்கு காரணம். சசிகலா தலைமையின் கீழ் உள்ளதுதான் உண்மையான அதிமுக.

துணிச்சல் இருந்தால் சட்டப்பேரவையில் திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரலாம்” என்று சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.

Leave a Response