முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர் விரைவில் அதிமுக நம் கைகளில் வரும் என தெரிவித்துள்ளார். மேலும் சில ரகசியங்கள் என்னிடம் உள்ளன எனக் கூறியுள்ள ஓபிஎஸ் வருங்காலத்தில் அதிமுகவில் பொதுச் செயலாளர் என்ற பதவியே இருக்காது என தெரிவித்துள்ளார்.
ஓ பன்னீர்செல்வத்தின் இந்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பேசிய ஓ பன்னீர்செல்வம், ” விரைவில் அதிமுக நம் கைகளில் வரும்; என்னிடம் சில ரகசியங்கள் உள்ளன. வருங்காலத்தில் பொதுச்செயலாளர் என்ற பதவியே இருக்காது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு நிச்சயமாக ஒரு தொண்டர் வருவார். நாங்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க காரணம் சாதாரண தொண்டர்களும் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக அமரலாம் என்ற நிலைக்கு கொண்டு வரத்தான்” என்றார். தொடர்ந்து, கடந்த காலத்தில் துணை முதலமைச்சர் பதவியை ஏன் ஏற்றேன் என்பது குறித்தும் ஓ பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் சில விஷயங்கள் குறித்து பேசினார் எனவும் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஓ பன்னீர்செல்வத்தின் இந்த பேச்சு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த காலங்களில் ஓ பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். மேலும் துணை முதலமைச்சர் ஆகவும் பதவி வகித்தார். ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்பட்டனர். இந்த நிலையில் இருவருக்குள்ளும் அரசியல் பிணக்கு ஏற்பட்டது. இதை எடுத்து தமிழக அரசியலில், பரபரப்பு தொற்றிக்கொள்ள ஓ பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓபிஎஸ் அதிமுகவில் சேர்வது குறித்து பேசுகையில், எந்த நிபந்தனையும் இன்றி சேர்வதாக தெரிவித்து இருந்தார். முன்னதாக ஓபிஎஸ் 2024 மக்களவை தேர்தலில் ராமநாதரபுரம் மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.