அரசுப் பேருந்தில் தீ. சென்னை பூந்தமல்லியில் பரபரப்பு!

ka
சென்னை பூந்தமல்லி அருகே கர்நாடக அரசு சொகுசு பேருந்து திடீரென தீ விபத்து.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து 45 பயணிகளுடன் சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த போது பூந்தமல்லி அருகே திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து பேருந்து ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்திவிட்டு, பயணிகள் அனைவரையும் கீழே இறங்கவும் அழைப்பு விடுத்ததுடன் பயணிகள் இறங்குவதற்கு தேவையான உதவிகளையும் செய்ததால் பயணிகள் உடனடியாக இறங்கிவிட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள், பேருந்தில் ஏற்பட்ட தீயை அணைக்கு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Response