10 மாத குழந்தை இதய அறுவை சிகிச்சைக்காக உதவி கேக்கும் மும்பை தம்பதிகள்

sumaya-donatetosave-21-1500616347
பிறந்து 10 மாதங்களே ஆன குழந்தை சுமயா. இந்த சுமயாவின் இதய அறுவை சிகிச்சைக்காக மும்பையைச் சேர்ந்த பெற்றோர் நிதி உதவி கோரியுள்ளனர். மும்பை பிவாந்தி பகுதியைச் சேர்ந்த முகமது இஷாக் என்பவரின் 10 மாத குழந்தை சுமயா அன்சாரி இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அந்த குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டால் 99% அவர் முழுமையாக குணமடைந்துவிடுவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சைக்கு ரூ2,30,000 பணம் தேவைப்படுகிறது. மேலும் மருத்துவமனையில் 15 நாட்கள் தங்க வேண்டுமாம். ஆகையால் சுமயாவின் பெற்றோர் நிதி உதவி கோரியுள்ளனர்.

இந்த நிதியுதவி செய்ய விருப்பமுள்ளவர்கள் ‘Sir HN Hospital Trust” என்ற பெயரில் மும்பையில் செலுத்தக் கூடிய வகையில் டிடி அனுப்பி உதவலாம். இது ஒரு அவசர கோரிக்கையாகும். நாம் செய்யும் உதவி அந்த பிஞ்சு குழந்தையின் உயிரைக் காப்பாற்றட்டும்.

Leave a Response