இங்கிலாந்தில் பெண்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் நடைப்பெற்று வருகின்றது. இதில் மொத்தம் 8 அணிகள் இடம் பெற்றுள்ளன. போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இறுதிப்போட்டிக்கு இந்தியா – இங்கிலாந்து அணிகள் முன்னேறியுள்ளன.
கடந்த உலகக் கோப்பை தொடரில் வெறும் 2 லட்சம் டாலர் (இன்றைய மதிப்பின் படி 1 கோடியே 28 லட்சம்) மட்டும் பரிசுத் தொகையாக இருந்தது. தற்போது நடைப்பெற்று வரும் தொடரில் பரிசுத்
தொகை 10 மடங்கு அதிகரித்து 20 மில்லியன் டாலர் பரிசுத்தொகை வழங்க உள்ளது.
ஞாயிறு அன்று உலகக் கோப்பை பெண்கள் கிரிக்கெட் இறுதிப்போட்டி நடைப்பெற உள்ளது. இதில் வெல்லும் அணிக்கு ஜாக்பார்ட் அடிக்க உள்ளது.
பரிசுத்தொகை விபரம்:
கோப்பையை வெல்லும் அணி : $660,000 (ரூ. 4,22,40,000)
இரண்டாம் இடம் : $330,000 (ரூ. 2,11,20,000)
அரையிறுதியில் தோற்ற அணிகளுக்கு : $165,000 (ரூ. 1,05,60,000)
லீக் போட்டியில் வெளியேறிய அணிகளுக்கு : $30,000 (ரூ. 19,20,000)
லீக் போட்டியில் வெற்றிபெற்ற ஒவ்வொரு போட்டிக்கும் கிடைக்கும் பரிசு : $20,000 (ரூ. 12,80,000)