சிவகங்கை மாவட்ட திருநங்கைகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது!

arthanaris
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, தேவகோட்டை பகுதிகளில் திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இவர்கள் திருநங்கைகள் என்பதால் பொதுமக்கள் யாரும் வாடகைக்கு வீடு கொடுக்க முன்வரவில்லை. இதனால் 12 திருநங்கைகள் சேர்ந்து ஒரே வீட்டில் வசித்துள்ளனர்.

அதையடுத்து மாவட்ட ஆட்சியர் மலர்விழியைச் சந்தித்து தங்களுக்கு வீடு அல்லது மனை வேண்டும் என கோரிக்கை மனுவை கொடுத்தனர். அதனை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் திருநங்கைகளுக்கு வீட்டு மனை பட்டா தர உத்தரவிட்டார். அதனை மிகுந்த மகிழ்ச்சியுடன் 12 திருநங்கைகளும் பெற்றுக்கொண்டனர்.

Leave a Response