நடிகை வீட்டை முற்றுகையிட்ட திருநங்கைகள்..!

நடிகை கஸ்தூரி தங்களை இழிவுபடுத்தும் வகையில் ட்விட்டர் பதிவு போட்டதாக கூறி துடைப்பத்துடன் அவரது வீட்டை திருநங்கைகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தொடர்பாக நடிகை கஸ்தூரி ட்விட்டரில் ஒரு பதிவை போட்டிருந்தார். அதில் திருநங்கைகளை இழிவுபடுத்தும் வகையில் படமும் வாசகங்களும் இருந்தன.

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த உடன் தாம் அந்த ட்விட்டை நீக்கிவிட்டேன் என பதிவிட்டிருந்தார் கஸ்தூரி. ஆனால் திருநங்கைகள் கொந்தளிப்பு ஓயவில்லை.

இப்படி தங்களை பொதுவெளியில் இழிவுபடுத்தியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி நடிகை கஸ்தூரி வீட்டை திருநங்கைகள் இன்று முற்றுகையிட்டனர். அப்போது சில திருநங்கைகள் கையில் துடைப்பம் ஏந்தியவாறு ‘அடக்கு அடக்கு நாவை அடக்கு’ என முழக்கம் எழுப்பினர்.

Leave a Response