லாரிக்கடியில் ஓட்டுநர் உறங்கியதை கவனிக்காமல் லாரியை எடுத்ததால், ஓட்டுநர் பலி!..

accident
காஞ்சிபுரம் வேலியூரில் உள்ள காகித மில்லில் அரக்கோணத்தைச் சேர்ந்த இனையதுலா வேலை செய்துள்ளார். வயது(35), இவர் இரவு பணி முடிந்து உடல் சோர்வடைந்து அந்த மில்லில் உள்ள லாரியின் கீழ் படுத்து உறங்கியுள்ளார். இந்நிலையில், லாரி பாதையை மறித்துக் கொண்டு நின்றதால், இம்தியாஸ் என்பவர் லாரியை ரிவர்ஸ் கியர் போட்டு பின்னே நகர்த்தியுள்ளார்.

அப்போது, சத்தமாக எழுந்த அழுகுரலை கேட்டு வாகனத்தை நிறுத்திய இம்தியாஸ் கீழ் இறங்கி பார்த்தபோது, லாரிக்கடியில் உறங்கிக் கொண்டிருந்த ஓட்டுநர் மீது லாரியின் சக்கரம் ஏறி ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட லாரி ஓட்டுநர் இனையதுலா உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக காஞ்சிபுரம் காவல்துறையினர் கவனக்குறைவால் நேர்ந்த மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Response