நிர்பயா வழக்கில் உறுதி செய்யப்பட்டது தீர்ப்பு….

nirbaya convicts
டெல்லியில் கடந்த 2012ல் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விஷயம் டெல்லி முழுவதும் உலுக்கி எடுத்தது அனைவரும் அறிந்தது. தற்பொழுது அவ்வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டது.

இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளியான ராம்சிங், கடந்த 2014ம் ஆண்டு திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மற்றொரு குற்றவாளி 18 வயதுக்கும் கீழ் இருப்பதால் அவரை சிறுவனாக கருதி, சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப் பட்டான்.

தற்போது மிச்சமுள்ள முகேஷ், பவன், அக்ஷய், வினய் சர்மா ஆகிய நான்கு குற்றவாளிகளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டெல்லி உயர்நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் குற்றவாளிகள் சார்பாக மேல் முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி குற்றவாளிகள் தூக்கு தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்வதில் எந்த முகாந்திரமும் இல்லை என கூறி டெல்லி உயர்நீதிமன்றம் கொடுத்த தூக்கு தண்டனையை உறுதி செய்துள்ளது.

Leave a Response