டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு : கடை அடித்து உடைப்பு!..

tpr
தமிழகம் எங்கும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் உள்ள மதுபானக்கடைகளை மூடக்கோரி உத்தரவிட்டது. இதனையடுத்து சாலையோரம் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுவிட்டாலும், அவற்றை கிராமப்பகுதிகளுக்கு அல்லது நெடுஞ்சாலையைவிட்டு 500 மீட்டருக்கு உள்ளே புதிதாக தொடங்குவதில் தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. தமிழக அரசின் இந்த செயலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து மறுஉத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகளை அமைக்க கூடாது என்று எச்சரித்துள்ளது.

இந்நிலையில் இடம் மாற்றி புதிதாக அமைக்கப்படும் டாஸ்மாக் கடைகளுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் முதலிபாளையத்தில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கினர். குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடையை அமைக்க கூடாது என 1000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Leave a Response