ஷோபா நேரு காலமானார்…

shobaa neru
நேரு குடும்பத்தின் வயதான பெண்மணியும், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் அத்தையுமான ஷோபா நேரு காலமானார்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்ற நேருவின் குடும்பத்திற்கும் நாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜூவ் காந்தி என்று மூன்று பேர் அவரின் குடும்பத்தில் இருந்து இந்திய பிரதமராக பணியாற்றியுள்ளனர். அத்தகு பெருமைமிகு நேரு குடும்பத்தின் மூத்த பெண்மணி ஷோபா நேரு உடல்நலக்குறைபாடு காரணமாக உயிரிழந்தார். 109 வயதாகும் ஷோபா நேரு கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைபாடு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.

ஜவஹர்லால் நேருவின் உறவினரான பி.கே.நேருவை திருமணம் செய்து கொண்ட ஷோபா நேரு, ஐ.நா சபையின் இந்திய தூதுவராகவும் பணியாற்றியுள்ளார். இவரது இறுதிச்சடங்கு இமாச்சல் பிரதேச மாநிலம் கசூலியில் நடைபெற்றது. இறுதிச்சடங்கில் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

Leave a Response