இயக்குனராக இருந்து தயாரிப்பாளராக மாறும் அட்லீ..!

atlee
தற்பொழுது இளைய தளபதி விஜயை வைத்து விஜய் 61 படத்தை இயக்கி வரும் இயக்குனர் அட்லீ. தீபாவளி வெளியீடு என அறிவித்து விட்டு பரபரப்பாக படப்பிடிப்பு பணிகளில் இறங்கியிருந்தார் அட்லீ, திடீரென பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார்.

நான் ஆரம்பித்த என் இயக்குனர் பயணத்தில் சகோதரனாக, குடும்பத்தில் ஒருவராக என்னை அரவணைத்து ஆதரித்த, ஆளாக்கிய பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி. உதவி இயக்குனராக இருந்த எனக்கு முதல் பட வாய்ப்பு அளித்த ஏ.ஆர்.முருகதாஸ் மாதிரி, தன் உதவியாளர்களுக்கு முதல் வாய்ப்பை கொடுத்து வளர்த்து விடும் என் குருநாதர் ஷங்கர் மாதிரி நான் வளர்ந்த சினிமாவுக்கு நானும் ஒரு பங்காக இருந்து இனி வரும் நல்ல கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட பட நிறுவனம் தான் ‘ஏ ஃபார் ஆப்பிள்’.

முதல் படத்தில் கமல்ஹாசனின் உதவியாளரான என் நண்பன் ஐக் எம்.ஆர்.ராதவின் பேரனாவர். இவர் என்னிடம் ஒரு பேய் கதையை கூறினார். எனக்கு பேய்னாலே ரொம்ப பயம், அவர் பேய் கதையை வந்து சொன்ன உடனே தயாரிக்க முடிவெடுத்து விட்டேன். இவர் ரொம்ப திறமைசாலியும் கூட. ஆதலால் இவரை சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தின் இயக்குனராக அறிமுகப்படுத்துகிறேன்.

தொடர்ந்து என்னுடன் 10 ஆண்டுகளாக பயணித்து வரும் சூர்யா பாலகுமாரன் இயக்கும் படத்தை இரண்டாவது தயாரிப்பாகவும், என் டீமில் சிறந்த திரைக்கதையாளனாக இருக்கும் அசோக் இயக்கும் படத்தை மூன்றாவது தயாரிப்பாகவும் தயாரிக்க இருக்கிறேன். இந்த இரண்டு படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் மாதம் நடக்கும் என்றார் அட்லீ.

Leave a Response