திருவாரூரில் பேரணி ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது..?

thiruvaroor
தமிழக விவசாயிகள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருவதால் தலைநகர் டெல்லியில் 41 நாட்களாக போராட்டம் நடைபெற்று வந்தது. அது தொடர்பாக தமிழகத்தில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஏப்ரல் 25ஆம் தேதி முழு கடை அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருவாரூரில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த பேரணி சுமார் 3 கிமீ தூரம் பேரணி நடத்திய திமுகவினர் திரூவாரூர் பேருந்து நிலையம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் காவல்துறையினர் திருமண மண்டபத்திற்கு அழைத்துச்சென்றனர்.

Leave a Response