ஆபாசப்படம், அவமானத்தில் பெண் தற்கொலை!..

sucide
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், மேற்படிப்பிற்காக டெல்லி வந்துள்ளார். அங்கு உடன் படித்த பிரகாஷ் என்பவரை அந்த இளம்பெண் காதலித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம், இளம்பெண்ணில் வீட்டிற்கு சமீபத்தில் தெரிந்துள்ளது. ஆனால் அவர்கள் இளம்பெண்ணின் காதலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறி, தன்னுடன் வருமாறு பிரகாஷ் அந்த இளம்பெண்ணை அழைத்துள்ளார். ஆனால் இதற்கு அந்த பெண் உடன்படவில்லை. இதனைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து இருந்த படுக்கையறை காட்சிகள் தன்னிடம் இருப்பதாகவும், வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்றால் அந்த காட்சிகளை இணையத்தில் வெளியிட்டு விடுவதாகவும் பிரகாஷ் அந்த பெண்ணை மிரட்டியுள்ளார்.

இதனைத் தொடந்து கடந்த 8-ஆம் தேதி பிரகாஷ் மீது அந்த இளம்பெண் கற்பழிப்பு புகார் அளித்துள்ளார். ஆனால் இந்த புகார் குறித்து காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அந்த இளம்பெண் நேற்று இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

இவ்வாறு உடனடி நடவடிக்கை எடுக்காத காவல் துறையினரை என்ன செய்யலாம், மேலும் இவ்வாறு தற்கொலைகள் நடக்காமல் இருக்க இன்னும் என்ன மாதிரியான் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். மேலும் இதற்க்கு அரசின் ஒத்துழைப்பும் மக்களின் ஒத்துழைப்பும் எவ்வாறு இருக்க வேண்டும்.

Leave a Response