காதலிக்க மறுத்த மாணவியின் கழுத்தை பிளேடால் அறுத்த மாணவன்!..

blade
திண்டுக்கல் மாவட்டம் நத்ததில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவியை, அதே பகுதியில் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மாணவனின் காதலை அந்த பெண் ஏற்கவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன் பிளேடால் அந்த மாணவியின் கழுத்தை அறுத்துள்ளார். ரத்த வெள்ளத்தில் வலியால் அந்த மாணவி துடித்து கொண்டிருந்தார். அப்போது அந்த மாணவனும் தன் கழுத்தை பிளேடால் அறுத்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது இருவரும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Response