தொழிலில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக கேரள மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை!!!

kerala
கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் குமார் என்பவர் இன்று காலை தனது வீட்டுக்கு வெளியே இருந்த மரத்தில் தூக்கிட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். மேலும், அவரது மனைவி மற்றும் 10 மற்றும் 7 வயதுடைய இரண்டு குழந்தைகள் வீட்டின் வெளியே இருந்த கிணற்றில் சடலமாக மிதந்துள்ளனர்.

பின்னேர் சுரேஷ் குமாரின் மற்றொரு குழந்தை மட்டும் உயிருக்கு போராடிய நிலையில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த திருச்சூர் போலீசார் சடலங்களை கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

வீட்டிற்கு வெளியே தூக்கிட்டு இறந்த நிலையில் இருக்கும் சுரேஷ் குமார், இவர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வந்துள்ளார். லாட்டரி சீட்டு விற்பனையில் ஏற்பட்ட கடுமையான நெருக்கடி காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Response