‘சதுரங்க வேட்டை 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் தனது காட்சிகளை நடித்து முடித்த அரவிந்த்சாமி!..

Sathuranga-Vettai-2-Movie
‘சதுரங்க வேட்டை 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் தனது காட்சிகளை அனைத்து சரிவர அரவிந்த்சாமி நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அரவிந்த்சாமி, த்ரிஷா இணைந்து நடித்துள்ளனர். கடந்த சில வாரங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வந்தது. இதில், தனது காட்சிகளை நடித்து அரவிந்த்சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் படக்குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இயக்குனர் நிர்மல் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் கிரைம் திரில்லர் படமான ‘சதுரங்க வேட்டை 2’ திரைப்படத்தில் முதன் முதலாக அரவிந்த்சாமி -த்ரிஷா இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். இப்படத்தில் இருவருக்கும் வில்லத்தனமான கதாப்பாத்திரம் கொடுக்கப்பட்டிருப்பதாக படக்குழு தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. கிராமப் பகுதிகளில் நடக்கும் ஊழலை எடுத்துக் கூறும் படமாக நட்டி நடிப்பில் வெளியான ‘சதுரங்க வேட்டை’ படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குற்றங்களை செய்வதை மையமாகக் கொண்டு உருவாகிவருவதாக கூறப்படுகிறது.

Leave a Response