தற்கொலை செய்துகொண்ட சிறு வயதில் திருமணமான இளம்பெண்!..

suicide
வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்துள்ள கீழ்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜீவிதா (19). இவருக்கும் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த அசோக்குமார் என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமனமாகியுள்ளது. பெண்களின் திருமண வயதான 18 வயதுக்குள்ளாகவே திருமணம் செய்து வைக்கப்பட்ட ஜீவிதா அடுத்த ஆறு மாதங்களில் தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.
தொடர்ந்து, அவரது கணவர் அசோக்குமார் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார். அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், இன்று அதிகாலையில் வீட்டை விட்டு சென்ற ஜீவிதா நெடுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அவரது தாயார் உள்பட அவரது உறவினர்கள் ஜீவிதாவை தேடி வந்த நிலையில், கீழ்குப்பம் கிராமம் அருகே உள்ள கிணற்றில் ஜீவிதா சடலமாக கிடந்துள்ளார்.

இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், தீயணைப்பு துறையினரின் உதவியுடன் சுமார் மூன்று மணி நேரப் போராட்டத்துக்கு பின்னர், இளம்பெண் ஜீவிதாவின் சடலத்தை கிணற்றில் இருந்து வெளியே எடுத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து திருமணமான எழு ஆண்டுகளுக்குள் தற்கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மாதவிடாய் காலத்தின் போது தீராத வயிற்று வலியால் ஜீவிதா அவதிப்பட்டு வந்ததாகவும், அதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையின் போது அவரது தயார் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

Leave a Response