ஜெயலலிதா வழங்கப்பட்ட இனோவா காரை தலைமை கழகத்தில் ஒப்படைத்தார் நாஞ்சில் சம்பத்


whatsapp-image-2017-01-03-at-11-27-41-amஜெயலலிதா பிரச்சாரத்திற்காக தன்னிடம் கொடுத்த காரை இன்று காலை அதிமுக தலைமை செயலகத்தில் ஒப்படைத்தார் நாஞ்சில் சம்பத். இது குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர்,

கடந்த 2012 டிசம்பர் 16ம் தேதி இயக்க பிரச்சாரத்திற்காக கழகத்தின் பொருளாளர் பெயரில் வாங்கப்பட்ட கார் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜெயலலிதா அவர்கள் சாவியை என்னிடம் ஒப்படைத்தார்கள். அந்த காரை பிரச்சாரத்தைத் தவிர என்னுடைய வேலைக்காக ஒரு நாளும் பயன்படுத்தியது இல்லை.

பிரச்சாரம் இல்லாத நாட்களில் அந்த கார் என்னுடைய நண்பன் ஜாபர் அலி வீட்டில் தான் நிற்கும். 8 மாதங்களாக பிரச்சாரம் ஏதும் இல்லை, தேவையில்லாமல் அந்த காரை வைத்துக்கொண்டு இனோவா சம்பத் என பழியும் சுமந்துகொண்டு எதற்கு இருக்கவேண்டும் என நினைத்து காரை இன்று காலை தலைமை செயலகத்தில் ஒப்படைத்துவிட்டேன்.’

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


 

Leave a Response