‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகும் பா.ரஞ்சித்

kabali-movie-director-pa-ranjith-interview-stills_20160627-10‘அட்டகத்தி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். அதைத் தொடர்ந்து கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தை இயக்கினார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தை இயக்கினார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இவர் இப்பொழுது தயாரிப்பு நிறுவனத்தை நிறுவியுள்ளார். ‘நீலம்’ புரொடக்சன்  என்று பெயரிட்ட இப்படநிறுவனம் மூலம் ‘பரியேறும் பெருமாள்’ (PARIYERUM PERUMAL) என்ற படத்தை தயாரிக்கிறார். இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்குகிறார். இவர் இயக்குநர் ராமிடம் ‘கற்றதுதமிழ்’, ‘தங்கமீன்கள்’, ‘தரமணி’ ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணிபுரிதுள்ளார்.

திருநெல்வேலி சுற்று வட்டாரப் பகுதியை சார்ந்த ஒரு கிராமத்து இளைஞனின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இக்கதை படமாக்கப்படுகிறது. லவ், ஆக்ஷன், என எல்லா தரப்பு ரசிகர்களை கவரும் விதமாகவும் கதை அமைந்துள்ளது.

இதில் நெல்லை மாவட்ட இளைஞராக கதிர் நாயகனாக நடிக்கிறார். ‘கிருமி’ படம் மூலம் சிறந்த நடிகர் என்று பெயரெடுத்த இவர் இப்படத்திற்காக சிறந்த பயிற்சி எடுத்துவருகிறார். இவருக்கு ஜோடியாக ஆனந்தி நடிக்கிறார். பாடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.

ஜனவரி மாத இறுதியில் இப்படத்தின் படபிடிப்பு தொடங்குகிறது. இதற்காக டைரக்சன் குழு இப்பொழுதே நெல்லையில் தங்கியுள்ளார்கள். படப்பிடிப்பு முழுவதும் நெல்லையில் நடைபெறுவதால் அந்த மாவட்ட மக்களை நடிக்க வைப்பதிற்கான தேர்வு இப்பொழுது நடைபெற்றுவருகிறது.

Leave a Response